நாம் வாழுகின்ற பூமி ஏராளமான மர்மங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. பூமிக்கு வேற்றுகிரகவாசிகளினுடைய வருகை என்பதும் இன்றைவரைக்கும் பூமியில் மர்மமாக இருந்து வருகின்ற ஒரு விடயம்தான்.
ஆனால் வேற்றுக்கிரத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்; அந்த உயிரினங்கள் ஏற்கனவே பூமிக்கு வருகை தந்துள்ளன என்றும் எதிர்வரும் காலங்களில் அந்த வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானதும், ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லாததுமான இந்த உண்மைகள் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம். |
Category : Science & Technology